வேளாண் எந்திரங்கள் பராமரிப்பு பயிற்சி


வேளாண் எந்திரங்கள் பராமரிப்பு பயிற்சி
x
தினத்தந்தி 10 Jan 2023 6:45 PM GMT (Updated: 10 Jan 2023 6:47 PM GMT)

ஆலத்தூரில் வேளாண் எந்திரங்கள் பராமரிப்பு பயிற்சி நடந்தது.

நாகப்பட்டினம்

திட்டச்சேரி:

வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை 2022-23 திட்டத்தின் கீழ் ஆலத்தூர் கிராம ஊராட்சியில் வேளாண் எந்திரங்கள் பராமரிப்பு பயிற்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு திருமருகல் வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் (பொறுப்பு) கலைச்செல்வன் தலைமை தாங்கினார். ஊராட்சி மன்ற தலைவர் பாலசுப்பிரமணியன் முன்னிலை வகித்தார். அட்மா திட்ட வட்டார தொழில்நுட்ப மேலாளர் மகேஸ்வரி வரவேற்றார். திருமருகல் வட்டார துணை வேளாண்மை அலுவலர் தெய்வக்குமார், வட்டாரத்தில் நடைமுறைப்படுத்தப்படும் திட்டங்கள் குறித்து பேசினார். வேளாண் பொறியியல் துறை சார்பில் நடைமுறை படுத்தப்படும் திட்டங்கள் குறித்து அலுவலர் ஏழுமலை பேசினார். காம்கோ கம்பெனி டீலர் சங்கரநாராயணன் தங்கள் நிறுவனத்தில் உள்ள வேளாண் எந்திரங்கள் மற்றும் பராமரிப்பு முறைகள் குறித்து பேசினார். முடிவில் வேளாண் உதவி அலுவலர் சிந்து நன்றி கூறினார். பயிற்சிக்கான ஏற்பாடுகளை உதவி தொழில்நுட்ப மேலாளர்கள் பிரபு மற்றும் ராஜ்குமார் செய்திருந்தனர்.


Next Story