ரூ.31¼ லட்சத்துக்கு வேளாண் பொருட்கள் ஏலம்


ரூ.31¼ லட்சத்துக்கு வேளாண் பொருட்கள் ஏலம்
x

ரூ.31¼ லட்சத்துக்கு வேளாண் பொருட்கள் ஏலம்போனது.

கரூர்

கரூர் மாவட்டம், சாலைப்புதூரில் வேளாண் ஒழுங்கு முறை விற்பனை கூடம் செயல்பட்டு வருகிறது. இங்கு வாரந்தோறும் தேங்காய், தேங்காய் பருப்பு மற்றும் நிலக்கடலைக்காய் ஆகியவற்றுக்கான ஏலம் நடைபெறுகிறது. இதில் அருகே உள்ள கரூர், க.பரமத்தி ஒன்றியம் பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் தாங்கள் விளைவித்த வேளாண் பொருட்களை விற்பனைக்கு கொண்டு செல்கின்றனர். இங்கு நடைபெறும் ஏலத்தில் தமிழகம் மற்றும் வெளிமாநிலங்களை சேர்ந்த வியாபாரிகள் மற்றும் எண்ணெய் நிறுவன முகவர்கள் கலந்து கொண்டு பொருட்களை வாங்கி செல்கின்றனர்.

அதன்படி இந்த வாரம் நடந்த ஏலத்தில் 16.64 குவிண்டால் எடை கொண்ட 5,354 தேங்காய் விற்பனைக்கு வந்தது. இதில் கிலோ ஒன்றுக்கு அதிகபட்ச விலையாக ரூ.27.05-க்கும், குறைந்தபட்ச விலையாக ரூ.23.05-க்கும், சராசரி விலையாக ரூ.25.65-க்கும் என மொத்தம் ரூ.41 ஆயிரத்து 343-க்கு விற்பனையானது.

அதேபோல் 415.56 குவிண்டால் எடை கொண்ட 815 மூட்டை தேங்காய் பருப்பு விற்பனைக்கு வந்தது. இதில் முதல் தரம் தேங்காய் பருப்பு கிலோ ஒன்றுக்கு அதிகபட்ச விலையாக ரூ.86.39-க்கும், குறைந்தபட்ச விலையாக ரூ.75.55-க்கும், சராசரி விலையாக ரூ.83.99-க்கும் விற்பனையானது. 2-ம் தரம் தேங்காய் பருப்பு கிலோ ஒன்றுக்கு அதிகபட்ச விலையாக ரூ.82.79-க்கும், குறைந்தபட்ச விலையாக ரூ.60.62-க்கும், சராசரி விலையாக ரூ.78.08-க்கும் என மொத்தம் ரூ.30 லட்சத்து 78 ஆயிரத்து 288-க்கு விற்பனையானது. சாலைப்புதூர் அரசு வேளாண் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் வேளாண் பொருட்கள் மொத்தம் ரூ.31 லட்சத்து 19 ஆயிரத்து 631-க்கு விற்பனையானது.


Next Story