மானியத்துடன் தொழில் தொடங்க விரும்பும் வேளாண்மை பட்டதாரிகள் நாளை மறுநாளுக்குள் விண்ணப்பிக்கலாம்


மானியத்துடன் தொழில் தொடங்க விரும்பும் வேளாண்மை பட்டதாரிகள் நாளை மறுநாளுக்குள் விண்ணப்பிக்கலாம்
x

மானியத்துடன் தொழில் தொடங்க விரும்பும் வேளாண்மை பட்டதாரிகள் நாளை மறுநாளுக்குள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

அரியலூர்

அரியலூர் மாவட்டத்தில் 2022-23-ம் ஆண்டில், கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டம் தேர்வு செய்யப்பட்ட 42 கிராம ஊராட்சிகளில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த கிராம ஊராட்சிகளில், வேளாண்மைத்துறை, தோட்டக்கலைத்துறை, வேளாண் வணிகம், வேளாண் பொறியியல், இளநிலை பட்டப்பிரிவில் சான்று பெற்ற இளம் தொழில் முனைவோருக்கு, அக்ரி கிளினிக் அல்லது வேளாண் சார்ந்த தொழில் தொடங்குவதற்கு வேளாண் பட்டதாரி இளைஞர்களுக்கு 25 சதவீதம் அதிகபட்ச நிதி உதவியாக ரூ.1 லட்சம் பின்னேற்பு மூலதன மானியமாக வழங்கப்படும். இத்திட்டத்தின் கீழ் மானிய உதவி பெற விரும்பும் வேளாண்மை பட்டதாரிகளின் வயது 21 முதல் 40-க்குள் இருக்க வேண்டும். வேளாண்மை, தோட்டக்கலை, வேளாண் பொறியியல் பிரிவில் குறைந்த பட்சம் இளநிலையில் பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும். அரசு மற்றும் தனியார் நிறுவனத்தில் பணியில் இருக்க கூடாது. விண்ணப்பதாரர் கணினி திறன் பெற்றிருக்க வேண்டும். ஒரு குடும்பத்திற்கு ஒரு வேளாண் பட்டதாரி மட்டுமே நிதி உதவி பெற தகுதி உடையவர் ஆவார். முறைப்படுத்தும் திட்டம், வேளாண் உட்கட்டமைப்பு நிதியின் கீழ் அனுமதிக்கக்கூடிய திட்டங்களின் அடிப்படையில் சுய தொழில்கள் தொடங்கலாம். எனவே தகுதியுடைய தொழில் தொடங்க இருக்கும் வேளாண் பட்டதாரிகள் உரிய விண்ணப்பத்துடன் விரிவான திட்ட அறிக்கையுடன் கல்வி சான்றிதழ், ரேஷன் கார்டு, வங்கி கணக்கு புத்தகம் உள்ளிட்ட அனைத்து ஆவணங்களுடன் நாளை மறுநாளுக்குள் (புதன்கிழமை) அந்தந்த பகுதி வேளாண்மை உதவி இயக்குனர் அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என அரியலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகம் சார்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.


Next Story