அம்பேத்கர் பிறந்தநாள் விழா


அம்பேத்கர் பிறந்தநாள் விழா
x

மாவட்டம் முழுவதும் அம்பேத்கர் பிறந்தநாள் விழா நடைபெற்றது.

விருதுநகர்


மாவட்டம் முழுவதும் அம்பேத்கர் பிறந்தநாள் விழா நடைபெற்றது.

விருதுநகர்

விருதுநகர் தொகுதி எம்.பி. மாணிக்கம் தாகூர் அலுவலகத்தில் அம்பேத்கரின் பிறந்தநாளையொட்டி அவரது உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

மாநில பொதுக்குழு உறுப்பினர் பாலகிருஷ்ணசாமி தலைமையில் நடந்த இந்த நிகழ்ச்சியில் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் வெயிலுமுத்து, சிவகுருநாதன், முன்னாள் இளைஞர் காங்கிரஸ் தலைவர் மீனாட்சி சுந்தரம், நகரசபை கவுன்சிலர்கள் பால்பாண்டி, மாலதி, சுந்தர் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

மக்கள் நீதி மய்யம்

விருதுநகர் மத்திய மாவட்டம் மக்கள் நீதி மய்யம் சார்பில் விருதுநகர் அருகே உள்ள சத்திரரெட்டியப்ட்டியில் அம்பேத்கரின் பிறந்த நாளை முன்னிட்டு அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

மாவட்ட செயலாளர் காளிதாஸ் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழி எடுத்துக் கொள்ளப்பட்டது. நிகழ்ச்சியில் ஒன்றிய செயலாளர் நாகேந்திரன், ஆதிதிராவிடர் அணி செயலாளர் பன்னீர், மகளிர் அணி செயலாளர் ராஜலட்சுமி உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆர்.சி. பள்ளியில் அம்பேத்கர் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.விழாவிற்கு பங்குத்தந்தைகள் சந்தன சகாயராஜ், ஜோசப் ஆகியோர் தலைமை தாங்கினர். அம்பேத்கர் பிறந்த நாளையொட்டி பல்வேறு போட்டிகள் நடைபெற்றன.

போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பள்ளி நிர்வாகி புனிதன் பரிசுகள் வழங்கினார். விழாவிற்கான ஏற்பாடுகளை பள்ளி முதல்வர்கள் செய்திருந்தனர்.

தாயில்பட்டி

வெம்பக்கோட்டை ஒன்றியம் ஏழாயிரம்பண்ணை அருகே உள்ள பனையடிப்பட்டியில் உள்ள அம்பேத்கரின் சிலைக்கு அம்பேத்கரின் பிறந்தநாளை முன்னிட்டு அருந்ததியர் முன்னேற்றக் கழக தலைவர் பாண்டியன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். தி.மு.க. கிழக்கு ஒன்றிய இளைஞரணி தலைவர் ராஜகுரு உள்பட கட்சி நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள். வெற்றிலையூரணியில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது.

காரியாபட்டி

காரியாபட்டியில் அம்பேத்கர் பிறந்தநாளை முன்னிட்டு விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் பஸ் நிலையம் எதிரில் அம்பேத்கரின் படத்திற்கு மாலை அணிவித்து மலர் அஞ்சலி செலுத்தினர். இதில் காரியாபட்டி ஒன்றிய செயலாளர் ஜெயபாண்டி, வழக்கறிஞர் அணி மாவட்ட அமைப்பாளர் இனியவன், மாவட்ட துணை செயலாளர் பாக்கியராஜ், பேரூராட்சி 3-வது வார்டு கவுன்சிலர் முனீஸ்வரி, நகர செயலாளர் இளந்தமிழ், ஒன்றிய நிர்வாகி மைக்.முத்துமணி, மல்லாங்கிணறு நகர செயலாளர் ஜெயசுந்தர் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

வத்திராயிருப்பில் நடைபெற்ற அம்பேத்கர் பிறந்தநாள் விழாவில் முன்னாள் வத்திராயிருப்பு வட்டார காங்கிரஸ் தலைவர் அண்ணாதுரை, நகர தலைவர் முத்துராஜ், கூமாபட்டி நகர தலைவர் சுந்தரம், நகர செயலாளர் செல்வம் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.


Next Story