108 ஆம்புலன்ஸ் சேவை தொடங்க வேண்டும்


108 ஆம்புலன்ஸ் சேவை தொடங்க வேண்டும்
x

செருவாவிடுதி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை மையமாக கொண்டு 108 ஆம்புலன்ஸ் சேவையை புதிதாக தொடங்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தஞ்சாவூர்

திருச்சிற்றம்பலம்;

செருவாவிடுதி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை மையமாக கொண்டு 108 ஆம்புலன்ஸ் சேவையை புதிதாக தொடங்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

108 ஆம்புலன்ஸ் சேவை

108 ஆம்புலன்ஸ் சேவை தமிழகம் முழுவதும் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. விபத்துகள் உள்ளிட்ட அவசர கால தருனங்களில் இதன் சேவை இன்றியமையாததாக உள்ளது. இந்த சேவை மூலம் நாடு முழுவதும் பல உயிர்கள் காப்பாற்றப்படுகின்றன.தஞ்சை மாவட்டம் செருவாவிடுதியில் தரம் மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையம் 24 மணி நேரமும் செயல்பட்டு வருகிறது.

கால தாமதம்

இந்த சுகாதார நிலையத்தின் மூலம் திருச்சிற்றம்பலம் பகுதியை சேர்ந்த சுமார் 20-க்கும் மேற்பட்ட கிராமப்புற மக்கள் தினமும் மருத்துவ உதவிகள் பெற்று பயனடைந்து வருகின்றனர். இந்த நிலையில், அவ்வப்போது விபத்துகள் மற்றும் அவசர கால நேரங்களில் 108 ஆம்புலன்ஸ் சேவையை பெறுவதற்கு பட்டுக்கோட்டை, பேராவூரணி, மற்றும் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அறந்தாங்கி, ஆலங்குடி பகுதிகளில் இயங்கி வரும் 108 ஆம்புலன்ஸ் சேவையை பயன்படுத்தி வருகிறார்கள்.இதனால் பாதிக்கப்பட்டவர்கள் குறிப்பிட்ட ஆஸ்பத்திரிகளுக்கு செல்ல சற்று கால தாமதம் ஏற்படுகிறது. எனவே, செருவாவிடுதியை மையமாகக் கொண்டு 108 ஆம்புலன்ஸ் சேவையை புதிதாக தொடங்க வேண்டும் என தமிழக அரசுக்கும் சுகாதாரத் துறை அதிகாரிகளுக்கும் திருச்சிற்றம்பலம் பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story