மாணவர்களுக்கு கல்வி, தொழில் வாய்ப்பு பற்றிய அனைத்தும் ஒரே இடத்தில்!! தினத்தந்தி மற்றும் எஸ்.ஆர்.எம் இணைந்து நடத்தும் கல்வி கண்காட்சி


மாணவர்களுக்கு கல்வி, தொழில் வாய்ப்பு பற்றிய அனைத்தும் ஒரே இடத்தில்!! தினத்தந்தி மற்றும் எஸ்.ஆர்.எம் இணைந்து நடத்தும் கல்வி கண்காட்சி
x

தினத்தந்தி நடத்தும் வருடாந்திர கல்வி கண்காட்சி இந்த ஆண்டு திருச்சி தாஜ் திருமண மண்டபத்தில் ஏப்ரல் 8 மற்றும் ஏப்ரல் 9, நந்தம்பாக்கத்தில் உள்ள சென்னை வர்த்தக மையத்தில் ஏப்ரல் 11 மற்றும் ஏப்ரல் 12, திருநெல்வேலி நூற்றாண்டு மண்டபத்தில் ஏப்ரல் 22 மற்றும் ஏப்ரல் 23ஆகிய தேதிகளில் நடக்கின்றது

இந்த கல்வி கண்காட்சியின் பிளாட்டினம் ஸ்பான்சராக எஸ்.ஆர்.எம் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம் (திருச்சிராப்பள்ளி) மற்றும் அசோசியேட் ஸ்பான்சர்களாக வேல்ஸ் அறிவியல் மற்றும் தொழில் நுட்ப உயர் கல்வி நிறுவனம், அமெட் கடல் சார் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனம், பாரத் உயர்கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம், ரெமோ இன்டர்நேஷனல் கல்லூரி, ராஜலக்ஷ்மி தொழில் நுட்ப நிறுவனம் மற்றும் தனலட்சுமி ஸ்ரீனிவாசன் பல்கலைக்கழகம் ஆகியவை தினத்தந்தி நாளிதழுடன் இணைந்து நடத்தி சிறப்பிக்க உள்ளன.

இந்த கண்காட்சி காலை 10 மணி முதல் மாலை 6.30 மணி வரையில் நடைபெறும். இக்கண்காட்சிக்கு அனுமதி இலவசம் என்பது குறிப்பிடத்தக்கது.

மாணவர்கள் முழுமையாக பயன்பெறும் பொருட்டு மருத்துவம், பொறியியல், வணிகவியல், நிர்வாகவியல் உள்ளிட்ட அனைத்து துறை சார்ந்த அனுபவமிக்க கல்வியியல் ஆலோசகர்கள் மற்றும் முன்னணி கல்வி நிறுவனங்கள் பங்கேற்கின்றனர்.

என்ன படிக்கலாம் எங்கு படிக்கலாம்

மாணவர்கள் தாங்கள் பிளஸ்-2 முடித்ததும் என்ன படிக்கலாம்? எந்த படிப்பிற்கு என்ன வேலை கிடைக்கும்? தற்போது வேலை வாய்ப்பு அதிகம் உள்ள படிப்பு எது? தங்கள் திறமைக்கு ஏற்ப எந்த கல்வியை படிக்கலாம்? எந்த கல்வியை எந்த கல்வி நிறுவனத்தில் பயில்வது சிறப்பாக இருக்கும்? மேலும் தற்போது அறிமுகமாகியுள்ள புதிய வகை படிப்புகள் என்ன? போன்ற எண்ணற்ற கேள்விகளுக்கு இந்த கல்வி கண்காட்சி விடைகொடுக்க காத்திருக்கிறது.

மருத்துவம் பொறியியல் என்று இல்லாமல் எல்லா வகை துறைகளையும் சார்ந்த கல்வி நிறுவனங்கள், நிகர்நிலை பல்கலைக்கழகங்கள் பங்கேற்கும் கல்வி கண்காட்சியாக உள்ளதால், பெற்றோர்கள் தங்களின் சந்தேகத்தையும் மாணவர்களின் திறனை ஆராய்ந்து அவர்களின் விருப்பத்திற்கு ஏற்ப கல்வியை தேர்வு செய்வதற்கு இக்கண்காட்சி சிறப்பாக வழிவகுக்கும் எனலாம். கூடுதலாக இக் கண்காட்சியில் பங்கேற்கும் கல்வியல் ஆலோசகர்களிடம் ஒவ்வொரு படிப்பிற்கு ஏற்ற வேலை வாய்ப்பையும், பொதுவான தனியார் மற்றும் அரசு வேலைவாய்ப்புகள், போட்டித் தேர்வுகள் பற்றிய அனைத்து விவரங்களையும் மாணவர்கள் கேட்டுப் பெறலாம்.

வேலை வாய்ப்பு பற்றியும் தெரிந்து கொள்ளலாம்

படிப்பு முடித்ததும் வேலை அல்லது படிக்கும்போதே வேலை, படிக்கின்ற கல்லூரியிலிருந்து முன்னணி தொழில் நிறுவனங்களில் வேலைக்கு தேர்வு செய்யப்படுவது, இதுதான் இன்றைய பெற்றோர்களும் மாணவர்களும் பெரிதும் விரும்புகின்றனர் என்றால் ஐயமில்லை. இதற்கு ஏற்ப இந்த கல்விக் கண்காட்சியில் பொறியியல் படிப்புகளில் எந்த வகை படிப்புகள் உடனடி வேலைவாய்ப்பு கொடுக்கும் என்பது முதற்கொண்டு அரசு உயர் பணிகளில் சேருவதற்கு எந்த படிப்பை கல்லூரியில் படிக்க ஆரம்பித்து போட்டித்தேர்வுக்கு தயாராவது என்பதுவரை தகவல்களை இக்கண்காட்சியில் பெற முடியும்.

நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களில் மாணவர்களின் சேர்க்கை வழிமுறைகள், கல்வி கட்டண விவரங்கள், மாணவர்களுக்கு கிடைக்கக்கூடிய கல்வி உதவித்தொகை, கட்டனச்சலுகைகள் போன்றவற்றையும் கல்வி கண்காட்சி அரங்கத்தில் அறிந்து கொள்ள முடியும்.

பிரபல கல்வி ஆலோசகர்களின் பங்கேற்பு

உணவு துறை தொடர்பான கேட்டரிங் டெக்னாலஜி, உணவு பொருட்கள் பதப்படுத்தும் தொழில் நுட்பம், தற்போது வளர்ந்து வரும் லாஜிஸ்டிக் மேனேஜ்மென்ட் எனப்படும் சரக்கு போக்குவரத்து நிர்வாகம் இன்று உலகையே அசத்திக் கொண்டிருக்கும் டிஜிட்டல் தொழில் நுட்பங்கள் போன்ற துறைகளில் தேர்ச்சி பெற எந்த வகை கல்வியை எந்த கல்லூரியில் பயிலலாம் என்பதையும் இங்குள்ள பிரபல கல்வி ஆலோசகர்கள் தங்களுக்கு அளிக்க காத்துள்ளனர்.

பெற்றோர், தன் குழந்தையை எந்த படிப்பில் சேர்க்கலாம் என்பதை தேர்வு செய்யவும் ,அவ்வாறு தேர்ந்தெடுத்த பின்னர் அந்தக் குறிப்பிட்ட படிப்பை அளிக்கும் கல்வி நிறுவனங்களில் எதில் சேர்க்கலாம் என அறிய ஒவ்வொரு கல்வி நிறுவனமாக சென்று வருவது மிகக் கடினம். ஆனால் இக்கண்காட்சி மூலம் , இக்கண்காட்சியில் பங்கேற்றுள்ள அனைத்து முன்னணி கல்வி நிறுவனங்கள் பற்றிய உங்களுக்கு தேவையான அனைத்து தகவல்களையும், அதாவது கல்வி கட்டணம், பாட முறை, பயிற்றுவிக்கும் முறை, கல்லூரியில் இருக்கும் இதர வசதிகள், விடுதி வசதி, மாணவர்களுக்கான சிறப்பு பேருந்துகள், அறிவியல் தொழில்நுட்பம் படிக்கும் மாணவர்களுக்கான செய்முறை பயிற்சி கூடங்கள் போன்ற அனைத்து தகவல்களையும் ஒருங்கே இந்த கண்காட்சியில் பெறலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

புதிய படிப்புகள்

காலத்திற்கு ஏற்றார்போல தேவைகள் மாறுவதால் கல்வித்துறையிலும் அத்தகு மாற்றங்கள் நிகழ்கிறது. பல புதிய படிப்புகள் ஒவ்வொரு ஆண்டும் அறிமுகப்படுத்தப்படுகிறது. இவற்றை பற்றி தெரிந்து கொள்வது மாணவர்களுக்கு தேவையான படிப்பை தேர்தேடுக்க மிகவும் பயனுள்ளதாய் இருக்கிறது. மேலும் வெளிநாடுகளில் உள்ள படிப்புகளை பற்றி தெரிந்துக்கொள்ளவும், அவற்றில் சேர்வதற்கான முறைகள் பற்றியும் தெரிந்துக்கொள்ளவும் இந்த கண்காட்சி உதவுகிறது.