சேலையில் தீப்பிடித்து மூதாட்டி பலி


சேலையில் தீப்பிடித்து மூதாட்டி பலி
x

சேலையில் தீப்பிடித்து மூதாட்டி பலியானார்.

திருச்சி

திருச்சி பெரியகடை வீதி மல்லிகைத்தெருவில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பை சேர்ந்தவர் சிங்காரம் பிள்ளை. இவரது மனைவி வள்ளியம்மை (வயது 84). இவர் நேற்று முன்தினம் மாலை தனது வீட்டில் விளக்கு பற்ற வைத்த போது எதிர்பாராத விதமாக அவரது சேலையில் தீ பற்றி எரிந்தது. இதனால் அவரின் அலறல் சத்தம் கேட்டு அக்கம், பக்கத்தில் இருந்தவர்கள் அவரை மீட்டு திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இந்நிலையில் நேற்று சிகிச்சை பலனின்றி வள்ளியம்மை பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்த புகாரின் பேரில் கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Related Tags :
Next Story