சிவன் கோவில்களில் அன்னாபிஷேகம்


சிவன் கோவில்களில் அன்னாபிஷேகம்
x

சங்கராபுரம் பகுதிசிவன் கோவில்களில் அன்னாபிஷேகம் நடைபெற்றது.

கள்ளக்குறிச்சி

சங்கராபுரம்,

சங்கராபுரம் அருகே உள்ள அ.பாண்டலம் அமிர்தநாயகி சமேத ஆதிபுரீஸ்வரர் கோவிலில் ஆண்டுதோறும் ஐப்பசி மாதத்தில் அன்னாபிஷேகம் நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்ததாண்டு கோவிலில் நேற்று அன்னாபிஷேகம் நடைபெற்றது. .இதையொட்டி சாமிக்கு பால், தயிர், இளநீர், சந்தனம், பன்னீர், தேன் உள்ளிட்ட பல்வேறு வகையான பொருட்களை கொண்டு அபிஷேகம் நடத்தப்பட்டது. பின்னர் ஆதிபுரீஸ்வரருக்கு அன்னத்தால் அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதே போல் சங்கராபுரம் முதல் பாலமேடு ஏகாம்பரேஸ்வரர், மஞ்சபுதூர் கைலாசநாதர் உள்பட பல்வேறு சிவன் கோவில்களில் அன்னாபிஷேகம் நடைபெற்றது.


Next Story