ஆயுதங்களுடன் நடமாடிய வாலிபர் கைது


ஆயுதங்களுடன் நடமாடிய வாலிபர் கைது
x
தினத்தந்தி 11 Jan 2023 6:45 PM GMT (Updated: 11 Jan 2023 6:46 PM GMT)

கோவில்பட்டியில்ஆயுதங்களுடன் நடமாடிய வாலிபர் கைது செய்யப்பட்டார்.

தூத்துக்குடி

கோவில்பட்டி:

கோவில்பட்டி மேற்கு போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர்கள் ஹரி கண்ணன், அமல்ராஜ் மற்றும் போலீசார் போஸ் நகர் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது கையில் அரிவாள், வாளுடன் நடமாடிய வாலிபரை பிடித்து விசாரணை நடத்தினர். அவர் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்தார்.

தொடர் விசாரணையில், அவர் போஸ்நகரை சேர்ந்த மாணிக்கவாசகம் மகன் மணிகண்டன் (வயது 25) என்பது தெரிய வந்தது. அவரிடம் இருந்து அரிவாள் மற்றும் வாளை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் இதுதொடர்பாக மேற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story