அனைத்து ஜனநாயக முற்போக்கு இயக்கங்களின் சார்பில் ஆர்ப்பாட்டம்


அனைத்து ஜனநாயக முற்போக்கு இயக்கங்களின் சார்பில் ஆர்ப்பாட்டம்
x
திருப்பூர்


தமிழ்நாடு கவர்னரை கண்டித்து உடுமலை மத்திய பஸ் நிலையம் அருகில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அனைத்து ஜனநாயக முற்போக்கு இயக்கங்களின் சார்பில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்துக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் உடுமலை நகரச்செயலாளர் தண்டபாணி தலைமை தாங்கினார்.

ஆர்ப்பாட்டத்தில் காங்கிரஸ், விடுதலைச்சிறுத்தைகள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, ம.தி.மு.க. தந்தை பெரியார் திராவிடர் கழகம், த.மு.மு.க. உள்ளிட்ட கட்சிகளைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்டவர்கள் கலந்துகொண்டனர்.


Next Story