வழிப்பறியில் ஈடுபட்ட 2 பேர் கைது


வழிப்பறியில் ஈடுபட்ட 2 பேர் கைது
x

வழிப்பறியில் ஈடுபட்ட 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

மதுரை


மதுரை செல்லூர் மணவாளநகர் பகுதியை சேர்ந்தவர் செல்வகுமார் (வயது23). இவர் தத்தனேரி களத்துப் பொட்டல் காமராஜர் தெருவில் நடந்து சென்றார். அங்கு வந்த வினோத்குமார் என்பவர் கத்தியை காட்டி மிரட்டி, அவரிடம் இருந்த ரூ.1200-ஐ பறித்து சென்றார். இது குறித்த புகாரின் பேரில் செல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து வினோத் குமாரை கைது செய்தனர். இதுபோல், பழங்காநத்தம் பகுதியை சேர்ந்தவர் பால்பாண்டி (47). இவர் சுந்தரராஜபுரம் பகுதியில் நடந்து சென்றார். அப்போது அந்த பகுதியை சேர்ந்த மணிகண்டன் என்பவர் கத்தியை காட்டி மிரட்டி அவரிடம் இருந்த ரூ.300-ஐ பறித்து சென்றார். இது குறித்த புகாரின் பேரில் ஜெய்ஹிந்த்புரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து மணிகண்டனை கைது செய்தனர்.


Related Tags :
Next Story