விவசாயி கொலை வழக்கில் மேலும் ஒருவர் கைது


விவசாயி கொலை வழக்கில் மேலும் ஒருவர் கைது
x

சூளகிரி அருகே விவசாயி கொலை வழக்கில் மேலும் ஒருவரை போலீசார் கைது செய்தனர்.

கிருஷ்ணகிரி

சூளகிரி

சூளகிரி அருகே கடத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் திப்பையா (வயது 42). விவசாயி. கடந்த 23-ந்தேதி அதிகாலையில் அப்பகுதியில் உள்ள ஒதுக்குப்புறமான இடத்தில் தலையில் கல்லைப்போட்டு கொலையான நிலையில் திப்பையாவின் உடல் கிடந்தது. இதுகுறித்து தகவல் அறிந்த பேரிகை போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சொத்து பிரச்சினை காரணமாக அவர் கொல்லப்பட்டாரா அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தினர்.

இந்தநிலையில், அதே கிராமத்தை சேர்ந்த திம்மராயப்பா (28), திம்மராஜ் (20), நரசிம்மன் (29) ஹரீஷ்குமார் (20), மூர்த்தி (20) மற்றும் 18 வயது கல்லூரி மாணவர் என 6 பேர் கடந்த 26-ந் தேதி கைது செய்யப்பட்டனர். இதனைத் தொடர்ந்து, தலைமறைவாக இருந்த சந்தீப் (23) என்பவரை போலீசார் நேற்று கைது செய்தனர்.


Related Tags :
Next Story