கன்று குட்டியை அடித்துக்கொன்ற முதியவர் கைது


கன்று குட்டியை அடித்துக்கொன்ற முதியவர் கைது
x

மதுரையில் கன்று குட்டியை அடித்துக்கொன்ற முதியவர் கைது செய்யப்பட்டார்.

மதுரை


மதுரையில் கன்று குட்டியை அடித்துக்கொன்ற முதியவர் கைது செய்யப்பட்டார்.

கன்றுகுட்டி

மதுரை கீழ வெளி வீதியை சேர்ந்தவர் சிக்கந்தர் சேக் அப்துல்லா. இவருக்கு ஆடு மாடுகளை வளர்ப்பதில் ஆர்வம். ஆனால் அவரது வீட்டின் அருகே போதிய இட வசதி இல்லாத நிலையில் வைகை ஆற்றின் தென்கரை பகுதியில் வளர்த்து வந்துள்ளார். இந்தநிலையில் அப்துல்லா வளர்த்து வந்த 7 மாத கன்றுகுட்டி கடுமையாக தாக்கப்பட்ட நிலையில் உயிரிழந்து கிடந்துள்ளது. இது குறித்து அருகில் விசாரித்துள்ளார்.

அப்போது நெல்பேட்டை பகுதியை சேர்ந்த காதர் சுல்தான் (65) என்பவர் கன்று குட்டியை அடித்துக் கொன்றது தெரிய வந்தது. இது குறித்து அவரிடம் கேட்டபோது நீங்கள் வளர்த்துவரும் கன்று குட்டி நான் வளர்க்கும் பசு மாட்டிடம் தினசரி வந்து பால் குடித்து விட்டு சென்றதால் கொலை செய்ததாகவும், இது குறித்து பேசினால் உன்னையும் கன்றுகுட்டியை அடித்துகொன்றது போல கொன்றுவிடுவேன் என்று மிரட்டியுள்ளார்.

கைது

இது குறித்து சேக் அப்துல்லா விளக்குத்தூண் போலீசில் புகார் அளித்தார். போலீசார் விசாரணை நடத்தி அங்குள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர். அதன் அடிப்படையில் விலங்குகள் துன்புறுத்தல் தடுப்பு சட்டம் உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து காதர் சுல்தானை கைது செய்தனர்.


Related Tags :
Next Story