அரசு பஸ் டிரைவரை தாக்கியவர் கைது


அரசு பஸ் டிரைவரை தாக்கியவர் கைது
x

அரசு பஸ் டிரைவரை தாக்கியவர் கைது செய்யப்பட்டார்.

மதுரை


மதுரை ஊமச்சிகுளம் பகுதியை சேர்ந்தவர் செந்தில் (வயது 45). அரசு பஸ் டிரைவர். சம்பவத்தன்று இவர் ஓட்டிச்சென்ற பஸ்சை அழகப்பன் நகர் பஸ் நிறுத்தத்தில் நிறுத்தினார். பின்னர் வண்டியை எடுக்க முயன்றபோது முன்னால் ஒரு மோட்டார் சைக்கிளை வாலிபர் நிறுத்தி வைத்திருந்தார். அதனை எடுக்குமாறு டிரைவர் செந்தில் கூறியுள்ளார். அதில் ஆத்திரமடைந்த அந்த வாலிபர் டிரைவரிடம் தகராறு செய்து அவரை தாக்கியதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் குறித்து டிரைவர் செந்தில் சுப்பிரமணியபுரம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து பை-பாஸ் ரோடு நேரு நகரை சேர்ந்த அன்பரசன் (30) என்பவரை கைது செய்தனர்.


Related Tags :
Next Story