மோட்டார்கள் திருட்டு; சிறுவன் கைது


மோட்டார்கள் திருட்டு; சிறுவன் கைது
x

மோட்டார்கள் திருடிய சிறுவன் கைது செய்யப்பட்டான்.

மதுரை

சோழவந்தான்,

சோழவந்தான் அருகே உள்ள வடகாடுபட்டி கிராமத்தில் விக்கிரமங்கலம் கிராமத்தை சேர்ந்த ஓய்வு பெற்ற ஆசிரியர் முத்துவும், அவரது மகனும் பட்டறை வைத்துள்ளனர். இந்நிலையில் இவர்களது பட்டறையில் இருந்த 2 மோட்டார்கள் மற்றும் சில பொருட்களும் திருடப்பட்டது. இதுகுறித்த புகாரின் பேரில் காடுபட்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் இளங்கோவன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார். அதில் பட்டறையில் திருடியது 17 வயது சிறுவன் என்பது தெரியவந்தது. இதையடுத்து சிறுவனை போலீசார் கைது செய்தனர்.



Next Story