புஞ்சைபுளியம்பட்டி அருகே தாயை கொன்ற 9-ம் வகுப்பு மாணவன் கைது- கூர்நோக்கு இல்லத்தில் ஒப்படைப்பு


புஞ்சைபுளியம்பட்டி அருகே தாயை கொன்ற 9-ம் வகுப்பு மாணவன் கைது- கூர்நோக்கு இல்லத்தில் ஒப்படைப்பு
x

புஞ்சைபுளியம்பட்டி அருகே தாயை கொன்ற 9-ம் வகுப்பு மாணவன் கைது செய்யப்பட்டு, கூர்நோக்கு இல்லத்தில் ஒப்படைக்கப்பட்டான்.

ஈரோடு

புஞ்சைபுளியம்பட்டி

தாயை கொன்ற 9-ம் வகுப்பு மாணவன் கைது செய்யப்பட்டு, கூர்நோக்கு இல்லத்தில் ஒப்படைக்கப்பட்டான்.

தாய் கொலை

புஞ்சைபுளியம்பட்டி அருகே உள்ள சுங்கக்காரன்பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் அருட்செல்வன். கட்டிட ஒப்பந்ததாரர். இவருடைய மனைவி யுவராணி. இவர் புஞ்சைபுளியம்பட்டி மின்வாரிய அலுவலகத்தில் பணிபுரிந்து வந்தார். இவர்களுடைய 14 வயது மகன் சத்தியமங்கலத்தில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தான். இதற்காக விடுதியில் தங்கியிருந்தார்.

கடந்த 12-ந் தேதி வீட்டுக்கு வந்திருந்த மாணவனிடம் படிக்க சொல்லி யுவராணி அறிவுரை கூறியுள்ளார். அதற்கு மாணவன் மறுத்து தான் இனி விடுதிக்கு செல்ல போவதில்லை என வாக்குவாதம் செய்துள்ளார். இதையடுத்து அன்று நள்ளிரவு தூக்கத்தில் இருந்து விழித்த மாணவன் ஆத்திரம் அடைந்து, தூங்கிக்கொண்டு இருந்த தாயின் தலையில் கல்லை தூக்கிப்போட்டான். இதில் ரத்தவெள்ளத்தில் மயங்கி கிடந்த யுவராணியை உறவினர்கள் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே அவர் இறந்தார். தாயாரை தாக்கிய மாணவன் அங்கிருந்து தப்பிஓடிவிட்டான்.

கூர்நோக்கு இல்லத்தில் ஒப்படைப்பு

இதுகுறித்து புஞ்சைபுளியம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய மாணவனை தேடி வந்தார்கள். இந்தநிலையில் நேற்று புங்கம்பள்ளியில் இருந்து விண்ணப்பள்ளி நோக்கி மாணவன் நடந்து சென்று கொண்டு இருந்தான். அப்போது அந்த வழியாக ரோந்து சென்ற இன்ஸ்பெக்டர் வடிவேல் குமார் தலைமையிலான போலீசார் மாணவனை பிடித்து கைது செய்தார்கள்.

இதையடுத்து சிறுவனை போலீசார் ஈரோடு இளைஞர் நீதி குழுமம் முன்பு ஆஜர்படுத்தி கோவையில் உள்ள கூர் நோக்கு இல்லத்தில் ஒப்படைத்தார்கள்.

படிப்பில் ஆர்வம் இல்லாத நிலையில் இருந்த மாணவனை, படிப்பில் நாட்டம் செலுத்துமாறு பெற்றோர் அடிக்கடி அறிவுரை கூறியுள்ளனர். இதனால் மனபாதிப்பில் இருந்த மாணவனை சில நாட்களுக்கு முன்பு மனோதத்துவ டாக்டரிடம் அழைத்து செல்ல பெற்றோர் முடிவு செய்திருந்தார்கள். ஆனால் அதற்குள் எதிர்பாராமல் இந்த அசம்பாவித சம்பவம் அரங்கேறிவிட்டது.


Related Tags :
Next Story