சென்னிமலை அருகே மரநாயை வேட்டையாடி சமைத்த 3 பேர் கைது


சென்னிமலை அருகே மரநாயை வேட்டையாடி சமைத்த 3 பேர் கைது
x

சென்னிமலை அருகே மரநாயை வேட்டையாடி சமைத்த 3 பேர் கைது

ஈரோடு

சென்னிமலை அருகே உள்ள அம்மாபாளையம் பகுதியில் ஒரு வீட்டில் மரநாய்க்கறி சமைத்து சாப்பிடுவதாக வனத்துறையினருக்கு தகவல் வந்தது. இதைத்தொடர்ந்து ஈரோடு வனச்சரகர் சுரேஷ், வனவர் சந்தோஷ், சென்னிமலை வனக்காப்பாளர் பாரதி ஆகியோர் சம்பவ இடத்துக்கு உடனடியாக விரைந்தனர். அப்போது 3 பேர் மரநாயை வேட்டையாடி அதை சமைத்துக்கொண்டு இருந்தது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து அவர்கள் 3 பேரையும் பிடித்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில் அவர்கள் அம்மாபாளையம் காலனியை சேர்ந்த மகேஷ் (வயது 47), முருகேஷ் (35), ரங்கராஜ் (36) ஆகியோர் என்பதும், இவர்கள் நாய்களை வைத்து மரநாயை வேட்டையாடி அதை வீட்டில் வைத்து சமைத்ததும் தெரியவந்தது. இதைத்தொடர்ந்து அவர்கள் 3 பேரும் கைது செய்யப்பட்டனர்.


Related Tags :
Next Story