புகையிலை பொருட்கள் வைத்திருந்தவர் கைது

புகையிலை பொருட்கள் வைத்திருந்தவர் கைது செய்யப்பட்டார்.
சிவகங்கை
திருப்புவனம்,
திருப்பாச்சேத்தி போலீஸ் சரகத்தை சேர்ந்தது மிக்கேல்பட்டினம் கிராமம். இங்கு தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக திருப்பாச்சேத்தி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராஜேஸ்வரி மற்றும் போலீசார் அங்கு சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அப்பகுதியை சேர்ந்த லூர்துஜோசப் (வயது 51) என்பவரது கடையில் தடை செய்யப்பட்ட 51 புகையிலை பாக்கெட்கள் விற்பனைக்கு வைத்திருந்தது தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து லூர்து ஜோசப்பை கைது செய்தனர். அவரிடம் இருந்து புகையிலை பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டது.
Related Tags :
Next Story