ஈரோடு போலீஸ் இன்ஸ்பெக்டருக்கு பிடிவாரண்டு


ஈரோடு போலீஸ் இன்ஸ்பெக்டருக்கு பிடிவாரண்டு
x
தினத்தந்தி 23 Sep 2022 7:30 PM GMT (Updated: 23 Sep 2022 7:30 PM GMT)

பிடிவாரண்டு

ஈரோடு

கோபி அருகே உள்ள சுண்டபாளையத்தை சேர்ந்தவர் பழனிச்சாமி (வயது 84). விவசாயி. இவருக்கும், இவருடைய மகன்களுக்கும் சொத்து சம்பந்தமாக முன் விரோதம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்தநிலையில் கடந்த 2020-ம் ஆண்டு நவம்பர் 12-ந் தேதி அன்று மர்மமான முறையில் வீட்டில் பழனிச்சாமி இறந்து கிடந்தார்.

இதுகுறித்து கோபி போலீஸ் இன்ஸ்பெக்டர் சோமசுந்தரம் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி, சொத்துக்காக பழனிச்சாமியை கொலை செய்ததாக 17 வயது சிறுவன் உள்பட 3 பேரை கைது செய்தார். இதுதொடர்பான வழக்கு கோபி 3-வது கூடுதல் மாவட்ட நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்த வழக்கின் விசாரணைக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் சோமசுந்தரம் ஆஜராகவில்லை. இதைத்தொடர்ந்து அவருக்கு பிடிவாரண்டு பிறப்பித்து நீதிபதி தயாநிதி உத்தரவிட்டார். தற்போது சோமசுந்தரம் ஈரோட்டில் போலீஸ் இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story