ஓசூரில்தனியார் நிறுவனத்தில்ரூ.3¼ லட்சம் திருடிய 2 பேர் பிடிபட்டனர்


ஓசூரில்தனியார் நிறுவனத்தில்ரூ.3¼ லட்சம் திருடிய 2 பேர் பிடிபட்டனர்
x
கிருஷ்ணகிரி

ஓசூர்

ஓசூரில் தனியார் நிறுவனத்தில் ரூ.3 லட்சத்து 27 ஆயிரம் திருடிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

தனியார் நிறுவனம்

ஓசூர் தர்கா ஆனந்த் நகரை சேர்ந்தவர் அமர்நாத் (வயது 28). இவர் ஓசூரில் ஓம் சாந்தி நகரில் உள்ள ஒரு நிறுவனத்தில் காசாளராக வேலை செய்து வருகிறார். கடந்த 11-ந் தேதி நிறுவனத்தை பூட்டி விட்டு வசூல் ஆன பணத்தை உள்ளே வைத்து சென்றார்.

இந்த நிலையில் மர்ம நபர்கள் நிறுவன கதவை திறந்து உள்ளே புகுந்து பெட்டியில் வைத்திருந்த ரூ.3 லட்சத்து 27 ஆயிரத்தை திருடிச் சென்றனர். இது குறித்து அமர்நாத் ஓசூர் டவுன் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராணி வழக்குப்பதிவு செய்து விசாரணைநடத்தினார்.

2 பேர் கைது

அப்போது பணத்தை திருடியது அதே நிறுவனத்தில் வேலை செய்த ஓசூர் தோட்டகிரி திருமலை நகரை சேர்ந்த சீனிவாசன் (24), சேலம் மாவட்டம் ரெட்டிப்பட்டியை சேர்ந்த டிரைவர் நந்தகுமார் (24) என தெரிய வந்தது. இதையடுத்து அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.2 லட்சத்தை பறிமுதல் செய்தனர்.


Next Story