ஓசூரில்இருதரப்பினர் மோதல்; 3 பேர் கைது


ஓசூரில்இருதரப்பினர் மோதல்; 3 பேர் கைது
x
கிருஷ்ணகிரி

ஓசூர்

ஓசூர் ஆவலப்பள்ளி இந்திரா நகரை சேர்ந்தவர் ஸ்ரீகாந்த் (வயது 23). பாரதியார் நகரை சேர்ந்தவர் அருண் (31). இவர்களுக்கு நிலம் தொடர்பாக பிரச்சினை இருந்து வருகிறது. பிரச்சினைக்குரிய நிலத்தில் ஸ்ரீகாந்த் குளியல் அறை கட்டியதாக கூறப்படுகிறது. இதை அருண் தரப்பினர் சேதப்படுத்தினர். அப்போது இருதரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டு ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டனர். இதுதொடர்பாக இருதரப்பினரும் ஓசூர் அட்கோ போலீசில் புகார் செய்தனர். அதன்பேரில் போலீசார் இருதரப்பினர் மீதும் வழக்குப்பதிவு செய்து அருண், வினோத்குமார் (35), நாகராஜ் (28) ஆகிய 3 பேரையும் கைது செய்தனர். மேலும் ஸ்ரீகாந்த் உள்ளிட்ட7 பேரை தேடி வருகின்றனர்.


Next Story