கஞ்சா பயிரிட்ட விவசாயி கைது


கஞ்சா பயிரிட்ட விவசாயி கைது
x

மாரண்டஅள்ளி அருகே கஞ்சா பயிரிட்ட விவசாயி கைது செய்யப்பட்டார்.

தர்மபுரி

மாரண்டஅள்ளி:

தர்மபுரி மாவட்டம் மாரண்டஅள்ளி போலீசார் பன்னிஅள்ளி கிராம பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது அந்த பகுதியில் கஞ்சா பயிரிட்டு இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் அதேபகுதியை சேர்ந்த மணி மகன் சரவணன் என்பவரது விவசாய நிலத்தில் சோதனை செய்தனர். அப்போது அவர் ஊடு பயிராக கஞ்சா பயிரிட்டு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து சரவணனை போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து கஞ்சா செடிகளை அழித்தனர்.


Next Story