கஞ்சா பதுக்கியவர் கைது


கஞ்சா பதுக்கியவர் கைது
x

அரூர் அருகே கஞ்சா பதுக்கியவர் கைது செய்யப்பட்டார்.

தர்மபுரி

அரூர்:

அரூர் பகுதிகளில் தனிப்படை ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது பாளையம் கிராமத்தில் சந்தேகத்திற்கிடமாக நின்று இருந்த சின்னதுரை (வயது 41) என்பவரை பிடித்து விசாரணை நடத்தினர். அவர் ஒரு பையில் 1 கிலோ கஞ்சாவை பதுக்கி வைத்திருப்பது தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். மேலும் கஞ்சாவும் பறிமுதல் செய்யப்பட்டது.



Next Story