குளியலறையில் செல்போன் வைத்து வீடியோ எடுத்த பெயிண்டர் கைது

வேலைக்கு சென்ற இடத்தில் வீட்டு குளியலறையில் செல்போன் வைத்துவீடியோ எடுத்த பெயிண்டர் கைது
சேலம்
சேலம்
சேலம் அழகாபுரம் குட்டை தெருவை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 26), பெயிண்டர். இவர் நேற்று முன்தினம் அம்மாபேட்டையில் உள்ள ஒரு வீட்டில் வர்ணம் பூசும் வேலையில் ஈடுபட்டார். அப்போது அவர் அந்த வீட்டின் குளியலறையில் தனது செல்போன் கேமராவை ஆன் செய்து வைத்திருந்தார். இதை அந்த வீட்டில் இருந்தவர்கள் கண்டுபிடித்தனர். இதையடுத்து பாத்ரூமில் செல்போன் வைத்து வீடியோ எடுத்த மணிகண்டனை அங்கிருந்தவர்கள் பிடித்து தாக்கியதாக கூறப்படுகிறது.
இதுதொடர்பாக அம்மாபேட்டை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து மணிகண்டனை கைது செய்தனர்.
Related Tags :
Next Story