சீனாபுரம் சந்தையில் ரூ.80 லட்சத்துக்கு மாடுகள் விற்பனை


சீனாபுரம் சந்தையில் ரூ.80 லட்சத்துக்கு மாடுகள் விற்பனை
x

சீனாபுரம் சந்தையில் ரூ.80 லட்சத்துக்கு மாடுகள் விற்பனையானது

ஈரோடு

சீனாபுரம் கால்நடை சந்தையில் ரூ.80 லட்சத்துக்கு மாடுகள் விற்பனை ஆனது.

கால்நடை சந்தை

பெருந்துறை அடுத்த சீனாபுரத்தில் கால்நடை சந்தை நடைபெற்றது. இந்த சந்தைக்கு சேலம் மாவட்டம் முத்தநாயக்கன்பட்டி, நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு, தர்மபுரி மாவட்டம் காரிமங்கலம் மற்றும் ஈரோடு மாவட்டத்தில் உள்ள பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான விவசாயிகள் தங்களுடைய மாடுகளை விற்பனைக்காக கொண்டு வந்திருந்தனர்.

இதில் விர்ஜின் கலப்பின பசு மாடுகள் 60-ம், அதன் கிடாரி கன்றுக்குட்டிகள் 100-ம் விற்பனைக்கு கொண்டுவரப்பட்டிருந்தன. இதேபோல் சிந்து மற்றும் ஜெர்சி இன பசு மாடுகள் 75-ம், அதன் கிடாரி கன்றுக்குட்டிகள் 200-ம் விற்பனைக்காக விவசாயிகள் கொண்டு வந்திருந்தனர். மேலும் நேற்று சந்தைக்கு புதிதாக, 20 எருமை கன்றுக்குட்டிகளும் விற்பனைக்காக கொண்டு வரப்பட்டிருந்தன.

ரூ.80 லட்சம்

மாடுகள் வரத்து வழக்கம்போல் இருந்தாலும், அந்தியூரில் நடைபெறும் கால்நடை சந்தை காரணமாக சீனாபுரம் கால்நடை சந்தைக்கு வியாபாரிகள் குறைந்த அளவிலேயே வந்திருந்தனர். இதனால் மாடுகள் விற்பனை குறைந்து காணப்பட்டது.

விர்ஜின் கலப்பின பசு மாடு ஒன்று ரூ.30 ஆயிரம் முதல் ரூ.55 ஆயிரம் வரையும், அதன் கிடாரி கன்றுக்குட்டி ஒன்று ரூ.20 ஆயிரம் முதல் ரூ.55 ஆயிரம் வரையும் விற்பனை ஆனது.

சிந்து மற்றும் ஜெர்சி இன பசு மாடு ஒன்று ரூ.25 ஆயிரம் முதல் ரூ.45 ஆயிரம் வரையும், அதன் கிடாரி கன்றுக்குட்டி ஒன்று ரூ.6 ஆயிரம் முதல் ரூ.25 ஆயிரம் வரையும் விற்பனை செய்யப்பட்டது. எருமை கன்றுக்குட்டி ஒன்று ரூ.15 ஆயிரம் முதல் ரூ.20 ஆயிரம் வரை விற்கப்பட்டது.

சீனாபுரம் கால்நடை சந்தையில் மாடுகள் மொத்தம் ரூ.80 லட்சத்துக்கு விற்பனை ஆனதாக சந்தை நிர்வாகிகள் தெரிவித்தனர். ஈரோடு, திருப்பூர், கோவை உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் மாடுகளை வாங்கி சென்றனர்.


Next Story