ஈரோட்டில்கட்டிட தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை


ஈரோட்டில்கட்டிட தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை
x

ஈரோட்டில் கட்டிட தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டாா்

ஈரோடு

ஈரோடு கருங்கல்பாளையம் கக்கன்நகர் பகுதியை சேர்ந்தவர் விஜய் (வயது 28). கட்டிட தொழிலாளி. இவருடைய மனைவி தீபா. இவர்களுக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர். விஜய்க்கு குடிப்பழக்கம் இருந்ததால் அவருக்கும், அவருடைய மனைவிக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.

இந்த நிலையில் கடந்த வாரம் மீண்டும் இவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. இதனால் தீபா கணவரிடம் கோபித்து கொண்டு, கரூரில் உள்ள தனது தாய் வீட்டிற்கு சென்று விட்டார். இதில் மனவேதனை அடைந்த விஜய் நேற்று முன்தினம் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதைப்பார்த்த அக்கம் பக்கத்தினர் இதுகுறித்து ஈரோடு கருங்கல்பாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார் விரைந்து சென்று விஜயின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து கருங்கல்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Related Tags :
Next Story