விவசாய நிலத்தில் முள்வெட்டிய முதியவர் மீது தாக்குதல்


விவசாய நிலத்தில் முள்வெட்டிய முதியவர் மீது தாக்குதல்
x

வந்தவாசி அருகே விவசாய நிலத்தில் முள்வெட்டிய முதியவரை தாக்கி 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

திருவண்ணாமலை

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியை அடுத்த கீழ்சாத்தமங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் கோவிந்தராஜ் (வயது 63). இவர், விவசாய நிலத்தில் முள் வெட்டி கொண்டிருந்தார். அப்போது அதே ஊரை சேர்ந்த சிவா, ஷாஜகான், பூங்காவனம், தேவயானை, வசந்தா ஆகிய 5 பேர் சேர்ந்து முள்வெட்டிக்கொண்டிருந்த கோவிந்தராஜிடம் யாரை கேட்டு முள்வெட்டுகிறாய் என்று ஆபாசமாக பேசி கட்டையால் அடித்துள்ளனர்.

இதில் படுகாயம் அடைந்த கோவிந்தராஜ் சிகிச்சைக்காக வந்தவாசி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இதுகுறித்த புகாரின் பேரில் பொன்னூர் போலீசார் சிவா, ஷாஜகான், பூங்காவனம், தேவயானை, வசந்தா ஆகிய 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story