பெண் மீது தாக்குதல்


பெண் மீது தாக்குதல்
x

சிவகிரியில் பெண்ணை தாக்கியவரை போலீசார் தேடிவருகிறார்கள்.

தென்காசி

சிவகிரி:

சிவகிரி அண்ணா நடுத்தெருவைச் சேர்ந்த செல்வக்குமார் மனைவி கிருஷ்ணவேணி. இவர்களுடைய மகள் பவித்ரா. இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த கருப்பையா மகன் ராஜா (வயது 35) என்பவருக்கும் திருமணம் நடந்தது. இவர்களுக்கு ஒரு குழந்தை உள்ளது.

கணவன்-மனைவிக்கு இடையே ஏற்பட்ட குடும்ப பிரச்சினை காரணமாக 2 பேரும் கடந்த ஒரு ஆண்டாக பிரிந்து வாழ்ந்து வருகிறார்கள். பவித்ரா தனது குழந்தையுடன் பெற்றோருடன் வசித்து வருகிறார்.

இந்த நிலையில் சம்பவத்தன்று ராஜா தனது மாமியார் வீட்டிற்கு சென்று கிருஷ்ணவேணியிடம் தனது குழந்தையை தருமாறு வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதில் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த ராஜா, கிருஷ்ணவேணியை கல்லால் தாக்கினார். இதில் அவர் காயம் அடைந்தார். இதுகுறித்து சிவகிரி போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. சப்-இன்ஸ்பெக்டர் அமிர்தராஜ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.


Related Tags :
Next Story