தேனியில் இருந்து கேரளாவுக்கு கடத்த முயற்சி:1 டன் ரேஷன் அரிசி பறிமுதல்; 2 பேர் கைது


தேனியில் இருந்து கேரளாவுக்கு கடத்த முயற்சி:1 டன் ரேஷன் அரிசி பறிமுதல்; 2 பேர் கைது
x
தினத்தந்தி 8 Sep 2023 6:45 PM GMT (Updated: 8 Sep 2023 6:46 PM GMT)

தேனியில் இருந்து கேரளாவிற்கு கடத்த முயன்ற 1 டன் ரேஷன் அரிசியை போலீசார் பறிமுதல் செய்தனர்.

தேனி

தேனியில் இருந்து கேரளாவிற்கு ஜீப்பில் ரேஷன் அரிசியை கடத்தி செல்வதாக உத்தமபாளையம் உணவு கடத்தல் தடுப்பு பிரிவு இன்ஸ்பெக்டர் சுப்புலட்சுமிக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் இன்ஸ்பெக்டர் தலைமையிலான அதிகாரிகள் தேனி மற்றும் பழனிசெட்டிபட்டி பகுதியில் நேற்று வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது வேகமாக வந்த ஜீப்பை போலீசார் மறித்தனர்.

பின்னர் ஜீப்பில் சோதனை மேற்கொண்டனர். அதில், மூட்டைகளில் 1,100 கிலோ ரேஷன் அரிசி இருந்தது. இதையடுத்து அரிசி மற்றும் ஜீப்பை பறிமுதல் செய்த போலீசார் ஜீப்பில் வந்தவர்களிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் பழனிசெட்டிபட்டியை சேர்ந்த ஹரிஹரன் (வயது 26), செல்வம் (24) என்பதும், தேனியில் இருந்து கேரளாவிற்கு ரேஷன் அரிசியை கடத்தி சென்றது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.


Related Tags :
Next Story