சத்தி மார்க்கெட்டில் மல்லிகைப்பூ கிலோ ரூ.750-க்கு ஏலம்


சத்தி மார்க்கெட்டில் மல்லிகைப்பூ கிலோ ரூ.750-க்கு ஏலம்
x

சத்தி மார்க்கெட்டில் மல்லிகைப்பூ கிலோ ரூ.750-க்கு ஏலம்

ஈரோடு

சத்தியமங்கலம்

சத்தியமங்கலம் பூ மார்க்கெட்டில் நாள்தோறும் காலை 7 மணி முதல் மாலை 4 மணி வரை பூக்கள் ஏலம் நடைபெறும். அதன்படி நேற்று நடந்த ஏலத்துக்கு சத்தியமங்கலம் மற்றும் சுற்று வட்டார பகுதியில் இருந்து விவசாயிகள் 3 டன் பூக்களை கொண்டு வந்திருந்தனர்.

இதில் மல்லிகைப்பூ கிலோ ரூ.750-க்கும், முல்லை ரூ.180-க்கும், காக்கடா ரூ.200-க்கும், செண்டுமல்லி ரூ.50-க்கும், பட்டுப்பூ ரூ.120-க்கும், சாதிமல்லி ரூ.500-க்கும், கனகாம்பரம் ரூ.400-க்கும், சம்பங்கி ரூ.140-க்கும், அரளி ரூ.120-க்கும், துளசி ரூ.40-க்கும், செவ்வந்தி ரூ.150-க்கும் ஏலம் போனது.


Next Story