முப்பெரும் தேவியர் கோவிலில் பாலாபிஷேகம்


முப்பெரும் தேவியர் கோவிலில் பாலாபிஷேகம்
x

முப்பெரும் தேவியர் கோவிலில் பாலாபிஷேகம் நடந்தது.

தென்காசி

வாசுதேவநல்லூர்:

புளியங்குடி முப்பெரும்தேவியர் பவானி அம்மன் கோவிலில் உள்ள பெரியபாளையத்து பவானி அம்மன், நாகக்கன்னி அம்மன், பாலநாகம்மன் கோவிலில் ஆடி மாதத்தையொட்டி சிறப்பு பாலாபிஷேகம், திருவிளக்கு பூஜை நடந்தது. இதையொட்டி ஆடி மாத பவுர்ணமி பூஜையின் சிறப்பு குறித்து கோவில் குருநாதர் சக்தியம்மா ஆன்மிக சொற்பொழிவாற்றினார். தொடர்ந்து முப்பெரும்தேவி அம்மனுக்கு பச்சரிசி மாவு, பன்னீர், மஞ்சள், இளநீர், பழங்கள், திருநீர், தயிர், குங்குமம், தேன், சந்தனம், நறுமணப் பொருட்கள் உள்பட 21 வகையான அபிஷேகங்களும், உலக நன்மைக்காகவும், மழைவேண்டியும், கொரோனா வைரஸ் முழுவதும் அழிந்து போகவும் வேண்டி 1,008 லிட்டரில் சிறப்பு பாலாபிஷேகம் நடந்தது.

பின்னர் கோவில் வளாகத்தில் உள்ள பாலவிநாயகர், புற்றுக்காளி, நாகக்காளி, சூலக்காளி, ரத்தக்காளி, பதினெட்டாம்படிகருப்பசாமி, செங்காளியம்மன் ஆகிய தெய்வங்களுக்கும் பாலாபிஷேகம் நடந்தது. முப்பெரும்தேவியருக்கு சிறப்பு மஞ்சள் காப்பு அலங்காரங்கள் செய்து பெரிய தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இரவில் திருவிளக்கு பூஜை நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.


Next Story