மாற்றுத் திறனாளிகளுக்கு வங்கி கடன்


மாற்றுத் திறனாளிகளுக்கு வங்கி கடன்
x

ராணிப்பேட்டையில் நடந்த மக்கள் குறைதீர்வு நாள் கூட்டத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கு, கலெக்டர் வளர்மதி வங்கி கடன் வழங்கினார்.

ராணிப்பேட்டை

குறைதீர்வு கூட்டம்

ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் மக்கள் குறைதீர்வு நாள் கூட்டம் நடந்தது. கலெக்டர் வளர்மதி தலைமை தாங்கி, பொதுமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டு குறைகளை கேட்டறிந்தார்.

கூட்டத்தில் நிலப்பட்டா குறைகள், பட்டா மாறுதல், இலவச வீட்டு மனைப்பட்டா, முதியோர் உதவித்தொகை, கூட்டுறவு கடனுதவி, தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம் சர்பாக வீடுகள் வேண்டி, மின்சாரத்துறை சார்பான குறைகள், கிராம பொதுப்பிரச்சினைகள், குடிநீர்வசதி, வேலைவாய்ப்பு வேண்டி என 259 மனுக்கள் பெறப்பட்டது. அந்த மனுக்கள் மீது உரிய விசாரணை மேற்கொண்டு தகுதியானதாக இருப்பின் உடனடியாக நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு, கலெக்டர் உத்தரவிட்டார்.

வங்கி கடன்

2 மாற்றுத் திறனாளிகளுக்கு ரூ.1 லட்சம் வங்கி கடன், மாற்றுத் திறனாளிகள் பெட்டிக்கடை நடத்துவதற்காக வழங்கப்பட்ட வங்கி கடனுக்கான மானியம் ரூ.25,000- க்கான காசோலை, தையல் எந்திரம் வேண்டி மனு அளித்த 2 நபர்களின் மனுவை விசாரணை மேற்கொண்டு உடனடியாக 2 பயனாளிகளுக்கு இலவச தையல் எந்்திரங்களை கலெக்டர் வளர்மதி வழங்கினார்.

கூட்டத்தில், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் லோகநாயகி, கலெக்டரின் நேர்முக உதவியாளார் (பொது) சுரேஷ், துணை கலெக்டர் (சமூக பாதுகாப்புத் திட்டம்) தாரகேஷ்வரி, பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் முரளி, கலால் உதவி ஆணையாளர் சத்திய பிரசாத், ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் பூங்கொடி, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சரவணக்குமார் மற்றும் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.


Next Story