பஸ் மோதி வக்கீல் சங்க தலைவர் பலி


பஸ் மோதி வக்கீல் சங்க தலைவர் பலி
x

தி்ட்டக்குடி அருகே பஸ் மோதி வக்கீல் சங்க தலைவர் பலியானாா்.

கடலூர்

திட்டக்குடி;

திட்டக்குடி அருகே உள்ள போத்திரமங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் ராதா மகன் முத்தழகன்(வயது 50). இவர், திட்டக்குடி வக்கீல் சங்க தலைவராகவும், ஆவினங்குடி கூட்டுறவு சங்க தலைவராகவும், முன்னாள் மங்களூர் ஒன்றிய துணை அ.தி.மு.க. செயலாளராகவும் இருந்தார். இவரது மனைவி சத்யா. இந்த தம்பதிக்கு முகேஷ்(19), சதீஷ்(18) ஆகிய 2 மகன்கள் உள்ளனர்.

இந்த நிலையில் முத்தழகன் இன்று காலை தனது வீட்டில் இருந்து மோட்டார் சைக்கிளில் திட்டக்குடி நீதிமன்றத்துக்கு புறப்பட்டார். தர்மக்குடிகாடு பஸ் நிறுத்தம் அருகில் சென்றபோது, கடலூரில் இருந்து திருச்சி நோக்கி வந்த அரசு பஸ், அவரது மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் தலை நசுங்கி முத்தழகன் சம்பவ இடத்திலேயே பலியானார். இது பற்றி தகவல் அறிந்ததும் திட்டக்குடி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று முத்தழகனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திட்டக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து சத்யா கொடுத்த புகாரின் பேரில் திட்டக்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story