பவானிசாகர் அணை நீர்மட்டம் ஒரே நாளில் ஒரு அடி உயர்வு


பவானிசாகர் அணை நீர்மட்டம் ஒரே நாளில் ஒரு அடி உயர்வு
x

பவானிசாகர் அணை நீர்மட்டம் ஒரே நாளில் ஒரு அடி உயர்ந்தது.

ஈரோடு

பவானிசாகர்

பவானிசாகர் அணை நீர்மட்டம் ஒரே நாளில் ஒரு அடி உயர்ந்தது.

பவானிசாகர் அணை

ஈரோடு மாவட்டத்தின் முக்கிய நீர் ஆதாரமாக இருப்பது பவானிசாகர் அணை. நீலகிரி மலைப்பகுதியில் இருந்து வரும் பவானி ஆறும், கூடலூர் மலைப்பகுதியில் இருந்து வரும் மாயாரும் அணைக்கு நீர்வரத்து ஆதாரங்களாக விளங்குகிறது. அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்காலில் திறக்கப்படும் தண்ணீரால் ஈரோடு, திருப்பூர், கரூர் மாவட்டங்களை சேர்ந்த சுமார் 2 லட்சத்து 7 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.

இதேபோல் பவானி ஆற்றின் மூலம் திறக்கப்படும் தண்ணீரால் அரக்கன்கோட்டை, தடப்பள்ளி மற்றும் காலிங்கராயன் வாய்க்கால்கள் மூலம் 35 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.

நீர்மட்டம் உயர்ந்தது

பவானிசாகர் அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்கால் மற்றும் பவானி ஆற்றில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பாசனத்துக்காக தண்ணீர் திறக்கப்பட்டது. அதேசமயம் அணையின் நீர்ப்பிடிப்பு பகுதியில் மழை பெய்யாததால் அணைக்கு தண்ணீர் வரத்து குறைந்தது. இதனால் அணையின் நீர்மட்டமும் சரிய தொடங்கியது. இந்தநிலையில் கடந்த ஒரு வாரமாக அணையின் நீர்ப்பிடிப்பு பகுதியில் பரவலாக பருவ மழை பெய்து வருகிறது. இதனால் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது. இதன் காரணமாக அணையின் நீர்மட்டம் 2 நாட்களில் ஒரு அடி உயர்ந்துள்ளது. நேற்று முன்தினம் மதியம் 2 மணியளவில் பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 78.25 அடியாக இருந்தது. நேற்று மதியம் 2 மணியளவில் பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 79.27 அடியாக உயர்ந்தது. இதனால் பவானிசாகர் அணை நீர் மட்டம் ஒரே நாளில் ஒரு அடி உயர்ந்தது. அணையின் நீர்மட்டம் உயர்ந்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.


Related Tags :
Next Story