பொக்லைன் எந்திர உரிமையாளர் தற்கொலை


பொக்லைன் எந்திர உரிமையாளர் தற்கொலை
x

நிலக்கோட்டை அருகே பொக்லைன் எந்திர உரிமையாளர் தற்கொலை செய்து கொண்டார்.

திண்டுக்கல்

நிலக்கோட்டை அருகே உள்ள கரியாம்பட்டியை சேர்ந்த ஆச்சிமுத்து மகன் நம்பியப்பன் (வயது 21). இவர் பொக்லைன் எந்திரம் வைத்து, ஓட்டி வந்தார். இந்தநிலையில் கடந்த சில மாதங்களாக அவரது பொக்லைன் எந்திரம் சரிவர வாடகைக்கு ஓடவில்லை. இதனால் மனமுடைந்த நிலையில் காணப்பட்ட நம்பியப்பன் சம்பவத்தன்று விஷத்தை குடித்து மயங்கி விழுந்தார்.

இதனை பார்த்த குடும்பத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி நம்பியப்பன் உயிரிழந்தார். இந்த தற்கொலை குறித்து நிலக்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story