மோட்டார் சைக்கிள் விபத்தில் சிறுவன் பலி


மோட்டார் சைக்கிள் விபத்தில் சிறுவன் பலி
x

கடையம் அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் சிறுவன் பலியானான்.

தென்காசி

கடையம்:

கடையத்தை அடுத்த பாப்பான்குளம் அருகே உள்ள செல்லபிள்ளையார் குளம் பகுதியை சேர்ந்தவர் பாலமுருகன். இவர் ஒலிபெருக்கி தொழில் செய்து வருகிறார். அவருடைய மகன் தரணிதரன் (வயது 17).

நேற்று முன்தினம் இரவு தரணிதரன் பாப்பான்குளத்தில் புரோட்டா வாங்கி விட்டு தனது ஊருக்கு மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார். அப்போது பாப்பான்குளம் அருகே உள்ள மலையான் பகுதியை சேர்ந்த தமிழரசன் மகன் சக்திவேல் முருகன் என்பவரும் மோட்டார் சைக்கிளில் வந்துள்ளார். அப்போது இரண்டு மோட்டார் சைக்கிள்களும் எதிர்பாராதவிதமாக நேருக்கு நேர் மோதின.

இதில் பலத்த காயமடைந்த தரணிதரன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் சக்திவேல் முருகன் சிகிச்சைக்காக நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இதுகுறித்து தகவல் அறிந்ததும் ஆழ்வார்குறிச்சி போலீசார் சம்பவ இடத்துக்கு வந்தனர். தரணிதரன் உடலை கைப்பற்றி பிரேத ப‌ரிசோதனை‌க்காக நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story