ரெயிலில் அடிப்பட்டு சிறுவன் பலி 2 பேர் படுகாயம்


ரெயிலில் அடிப்பட்டு சிறுவன் பலி  2 பேர் படுகாயம்
x

வடலூரில் ரெயிலில் அடிபட்டு சிறுவன் பரிதாபமாக இறந்தான். மேலும் படுகாயம் அடைந்த 2 பேர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்

கடலூர்

வடலூர்

நண்பர்கள்

வடலூர் பார்வதிபுரத்தை சேர்ந்த சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன். இவரது மகன் மணிகண்டன்(வயது 15). அதேபோல் ஜோதி நகரை சேர்ந்த ராமர் மகன் சஞ்சய்(22), புதுநகர் சக்திவேல் மகன் சுரேந்தர் என்கிற சூர்யா(15). நெய்வேலி ஆர்ச் கேட் மோகன் மகன் பார்த்திபன்(29).

நண்பர்களான இவர்கள் 4 பேரும் நேற்று முன்தினம் இரவு வடலூர் அருகே ரெயில் தண்டவாளத்தில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தனர். பின்னர் அவர்கள் தண்டவாளத்திலேயே படுத்து உறங்கியதாக கூறப்படுகிறது.

சிறுவன் பலி

அப்போது இரவு 10.35 மணிக்கு வடலூரிலிருந்து நெய்வேலிக்கு நிலக்கரி ஏற்றி சென்ற ரெயில் அவர்கள் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த மணிகண்டன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தான்.

படுகாயம் அடைந்த சஞ்சய், சுரேந்தர் ஆகிய இருவரையும் அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக கடலூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள். இந்த விபத்தில் பார்த்திபன் எழுந்து ஓடி விட்டதால் அவருக்கு காயம் ஏதும் ஏற்படவில்லை.

இது குறித்து சிதம்பரம் ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story