சிறுமியை திருமணம் செய்த வாலிபர் போக்சோவில் கைது


சிறுமியை திருமணம் செய்த வாலிபர் போக்சோவில் கைது
x

சிறுமியை திருமணம் செய்த வாலிபர் போக்சோவில் கைது செய்யப்பட்டார்.

புதுக்கோட்டை

திருமயம் அருகே கே.பள்ளிவாசல் பகுதியை சேர்ந்தவர் பொன்னையா (வயது 24). தொழிலாளி. இவர், 17 வயது சிறுமிக்கு ஆசை வார்த்தை கூறி கடத்தி சென்று திருமணம் செய்துள்ளார். இதுகுறித்து சிறுமியின் தந்தை அளித்த புகாரின் பேரில் திருமயம் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து, பொன்னையாவை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story