அக்காளின் கழுத்தை அறுத்த தம்பி கைது


அக்காளின் கழுத்தை அறுத்த தம்பி கைது
x

பழனி அருகே அக்காளின் கழுத்தை அறுத்த தம்பி கைது செய்யப்பட்டார்.

திண்டுக்கல்

பழனி அருகே உள்ள நரிக்கல்பட்டி நெசவாளர் காலனியை சேர்ந்தவர் செல்லமுத்து. விவசாயி. இவருக்கு செல்வநாயகி (வயது 26) என்ற மகளும், செல்வகுமார் (24) என்ற மகனும் உள்ளனர். இவர்கள் 2 பேரும் பட்டதாரிகள் ஆவர். கடந்த சில தினங்களாக செல்வகுமார், தனது குடும்பத்தினருடன் தகராறு செய்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்தநிலையில் நேற்று வீட்டில் இருந்த செல்வநாயகியுடன் அவர் தகராறு செய்தார். இதில் ஆத்திரம் அடைந்த செல்வகுமார், தான் வைத்திருந்த கத்தியால் செல்வநாயகியின் கழுத்தை திடீரென அறுத்தார். இதனையடுத்து செல்வநாயகி அலறினார். அவரது சத்தம் கேட்டு, அருகில் உள்ள தோட்டத்தில் வேலை செய்து கொண்டிருந்த செல்லமுத்து வீட்டுக்கு ஓடி வந்தார். அங்கு கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் ரத்த வெள்ளத்தில் செல்வநாயகி உயிருக்கு போராடி கொண்டிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

பின்னர் அக்கம்பக்கத்தினர் உதவியுடன் அவரை மீட்டு சிகிச்சைக்காக, பழனி அரசு மருத்துவமனையில் செல்லமுத்து சேர்த்தார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதற்கிடையே கத்தியுடன் நின்ற செல்வக்குமாரை பிடித்து, கீரனூர் போலீசாரிடம் செல்லமுத்து ஒப்படைத்தார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து செல்வக்குமாரை கைது செய்தனர். மேலும் அவர் தனது அக்காளை கத்தியால் குத்தியதற்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story