லாரியின் பின்னால் மோட்டார் சைக்கிள் மோதி பஸ் டிரைவர் பலி


லாரியின் பின்னால் மோட்டார் சைக்கிள் மோதி பஸ் டிரைவர் பலி
x

க.பரமத்தி அருகே லாரியின் பின்னால் மோட்டார் சைக்கிள் மோதி பஸ் டிரைவர் பரிதாபமாக இறந்தார்.

கரூர்

பஸ் டிரைவர் பலி

கரூர் மாவட்டம், க.பரமத்தி அருகே உள்ள விஸ்வநாதபுரி கிழக்கு தெருவை சேர்ந்தவர் காளிமுத்து. இவரது மகன் அரவிந்த் (வயது 25). பஸ் டிரைவர். இவர் நேற்று முன்தினம் இரவு சொந்த வேலை காரணமாக தனது மோட்டார் சைக்கிளில் க.பரமத்தி நோக்கி கரூர் -கோவை தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தார்.

அப்போது திருச்சியில் இருந்து தென்னிலை நோக்கி அரிசி ஏற்றிக்கொண்டு சென்ற லாரி புதுக்கள்ளி அருகே சென்று கொண்டிருந்தது. அப்போது எதிர்பாராத விதமாக அரவிந்த் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் லாரியின் பின்னால் பயங்கரமாக மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட அரவிந்த் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

வழக்குப்பதிவு

இதுகுறித்து தகவல் அறிந்த க.பரமத்தி போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தனர். பின்னர் அரவிந்த் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த விபத்து குறித்து க.பரமத்தி போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Related Tags :
Next Story