கடலூர் முதுநகர் அருகேபஸ்-லாரி நேருக்குநேர் மோதல்; 22 பயணிகள் காயம்போக்குவரத்து பாதிப்பு


கடலூர் முதுநகர் அருகேபஸ்-லாரி நேருக்குநேர் மோதல்; 22 பயணிகள் காயம்போக்குவரத்து பாதிப்பு
x
தினத்தந்தி 9 Jan 2023 6:45 PM GMT (Updated: 9 Jan 2023 6:45 PM GMT)

கடலூர் முதுநகர் அருகே தனியார் பஸ்-லாரி நேருக்குநேர் மோதிய விபத்தில் பயணிகள் 22 பேர் காயமடைந்தனர். இந்த விபத்து காாரணமாக அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

கடலூர்


கடலூர் முதுநகர்,

நேருக்குநேர் மோதல்

புதுச்சேரியில் இருந்து தனியார் பஸ் பயணிகளுடன் சிதம்பரம் நோக்கி புறப்பட்டது. பஸ்சை விழுப்புரம் மகாராஜபுரத்தை சேர்ந்த வேதகிரி (வயது 34) என்பவர் ஓட்டினார். அந்த பஸ் நேற்று மதியம் கடலூர் முதுநகர் அடுத்த பூண்டியாங்குப்பம் அருகே சென்றபோது, எதிரே சமையல் கியாஸ் சிலிண்டர்கள் ஏற்றி வந்த லாரியும், தனியார் பஸ்சும் எதிர்பாராதவிதமாக நேருக்கு நேர் மோதிக் கொண்டன. இந்த விபத்தில் பஸ்சில் பயணம் செய்த சிதம்பரத்தை சேர்ந்த கவுரி, மல்லிகா, சந்திரா, ராமபாதம், மயிலாடுதுறையை சேர்ந்த பவானி, மகாலிங்கம், பண்ருட்டியை சேர்ந்த சரஸ்வதி, கடலூர் சாவடியை சேர்ந்த தனசேகரன் உள்பட 22 பேர் காயமடைந்தனர். விபத்தில் பஸ்-லாரியின் முன்பக்கம் சேதமடைந்தது.

கோட்டாட்சியர் ஆறுதல்

இதை பார்த்த அப்பகுதி மக்கள் விபத்தில் சிக்கிய 22 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக கடலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள். இதனிடையே விபத்து குறித்த தகவல் அறிந்த கடலூர் கோட்டாட்சியர் அதியமான் கவியரசு மருத்துவமனைக்கு விரைந்து வந்து, விபத்தில் காயமடைந்தவர்களுக்கு ஆறுதல் கூறியதோடு, அவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்குமாறு டாக்டர்களை அறிவுறுத்தினார். மேலும் இந்த விபத்து குறித்த புகாரின்பேரில் கடலூர் முதுநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விபத்து காரணமாக கடலூர்- சிதம்பரம் சாலையில் ½ மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.


Next Story