ஊராட்சி, ஒன்றியங்களில் காலியாக உள்ள பதவிகளுக்கான இடைத்தேர்தல் நடக்கும் பகுதிகளில் 3 நாட்கள் டாஸ்மாக் கடைகள் மூடல் கலெக்டர் தகவல்


ஊராட்சி, ஒன்றியங்களில் காலியாக உள்ள பதவிகளுக்கான  இடைத்தேர்தல் நடக்கும் பகுதிகளில் 3 நாட்கள் டாஸ்மாக் கடைகள் மூடல்  கலெக்டர் தகவல்
x

ஊராட்சி, ஒன்றியங்களில் காலியாக உள்ள பதவிகளில் இடைத்தேர்தல் நடக்கும் பகுதிகளில் 4 நாட்கள் டாஸ்மாக் கடைகள் மூடப்படுகிறது

கடலூர்


கடலூர் மாவட்ட கலெக்டர் பாலசுப்பிரமணியம் செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

கடலூர் மாவட்டத்தில் 14 ஊராட்சி ஒன்றியங்களில் காலியாக உள்ள மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர்-1, ஊராட்சி மன்ற தலைவர்கள் -4, கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர்-26 ஆகிய 31 பதவி இடங்களை நிரப்புவதற்கான இடைத்தேர்தல் நாளை மறுநாள் (சனிக்கிழமை) காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெறுகிறது. மேலும் வாக்கு எண்ணிக்கை 12.7.2022 அன்று நடைபெற உள்ளது.

இந்த நிலையில் இன்று (வியாழக்கிழமை) காலை 10 மணி முதல் நாளை மறுநாள் நள்ளிரவு 12 மணி வரையும், வாக்கு எண்ணிக்கை நாளான 12-ந் தேதியும் வாக்குப்பதிவு நடைபெறும் மற்றும் வாக்கு எண்ணும் மையங்களை சுற்றி சுமார் 5 கி.மீ. தொலைவில் உள்ள டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும். மேலும் டாஸ்மாக் மூலம் நடத்தப்படும் சில்லரை மதுபான கடைகளின் மேற்பார்வையாளர்கள், மதுபான கடைகளும், மது அருந்தும் இடங்களும் திறக்காமல் இருப்பதை உறுதி செய்துகொள்ளவேண்டும்.

இதனை மீறி எவரேனும் கடைகள் மற்றும் மது அருந்தும் கூடங்களில் மதுபானங்கள் விற்றாலோ, திறந்து வைத்திருந்தாலோ கடை மேற்பார்வையாளர் பெயரிலும், எப்.எல்.3, பார் உரிமையாளர்கள் பெயரிலும் குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.


Next Story