மிட்டாய் வியாபாரி தூக்குப்போட்டு தற்கொலை


மிட்டாய் வியாபாரி தூக்குப்போட்டு தற்கொலை
x

வள்ளியூரில் மிட்டாய் வியாபாரி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

திருநெல்வேலி

வள்ளியூர்:

வள்ளியூர் காமராஜர் நகர் 5-வது தெருவை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன் (வயது 45). மிட்டாய் வியாபாரம் செய்து வந்தார். இவருடைய மனைவி சொர்ணலட்சுமி (36). இவர் வள்ளியூர்- ராதாபுரம் மெயின் ரோட்டில் உள்ள தனியார் பள்ளியில் வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் சொர்ணலட்சுமி வேலைக்கு செல்வது பாலசுப்பிரமணியனுக்கு பிடிக்கவில்லை.

இதனால் வேலைக்கு செல்லவேண்டாம் என்று பாலசுப்பிரமணியன் கூறியதால் இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதனால் மனமுடைந்த பாலசுப்பிரமணியன் தனது வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்ததும் வள்ளியூர் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்றனர். பாலசுப்பிரமணியன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இச்சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story