கஞ்சா எண்ணெய் பதுக்கிய 3 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது


தினத்தந்தி 1 July 2022 1:26 PM GMT (Updated: 1 July 2022 1:27 PM GMT)

தூத்துக்குடியில் கஞ்சா எண்ணெய் பதுக்கிய 3 பேர் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர்.

தூத்துக்குடி

தூத்துக்குடியில் கஞ்சா எண்ணெய் பதுக்கிய வழக்கில் 3 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர்.

கஞ்சா எண்ணெய்

தூத்துக்குடி ஜார்ஜ் ரோடு இந்திரா நகர் பகுதியில் சட்டவிரோதமாக விற்பனைக்காக கஞ்சா எண்ணெய் பதுக்கி வைத்து இருந்ததாக, தூத்துக்குடி ஜார்ஜ் ரோடு இந்திரா நகரை சேர்ந்த மோகன் மகன் ஆனந்தகுமார் (வயது 32), ராஜேந்திரன் மகன் சார்லஸ் (32) மற்றும் தூத்துக்குடி மேலசண்முகபுரம் பகுதியை சேர்ந்த முருகேசன் மகன் படையப்பா என்ற அருண்குமார் (28) ஆகிய 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். இவர்கள் 3 பேரையும் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் பரிந்துரை செய்தார்.

குண்டர் சட்டம்

அதன்பேரில் மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ், குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் ஆனந்தகுமார், சார்லஸ், படையப்பா என்ற அருண்குமார் ஆகிய 3 பேரையும் கைது செய்ய உத்தரவிட்டார். அந்த உத்தரவு நகலை தென்பாகம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜாராம் பாளையங்கோட்டை ஜெயிலில் வழங்கினார். நடப்பு ஆண்டில் இதுவரை போதை பொருட்கள் கடத்தல் மற்றும் விற்பனையில் ஈடுபட்ட 31 பேர் உள்பட 127 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டு ஜெயிலில் அடைக்கப்பட்டு உள்ளனர்.


Next Story