மத்திகிரி அருகே வாலிபரை தாக்கி கார் திருட்டு 4 பேருக்கு போலீஸ் வலைவீச்சு


மத்திகிரி அருகே  வாலிபரை தாக்கி கார் திருட்டு  4 பேருக்கு போலீஸ் வலைவீச்சு
x

மத்திகிரி அருகே வாலிபரை தாக்கி கார் திருடிய 4 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

கிருஷ்ணகிரி

மத்திகிரி:

தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே உள்ள கல்லா அக்ரஹாரத்தை சேர்ந்தவர் வீரமணி (வயது 25). இவர் ஓசூரில் வக்கீல் அலுவலகத்தில் கிளர்க்காக பணிபுரிந்து வருகிறார். சம்பவத்தன்று இரவு இவர் ஓசூர் அருகே சொப்பட்டி லே அவுட்டில் உள்ள நண்பரை பார்க்க காரில் சென்றார். அப்போது அங்கு வந்த 2 பேர் அவரிடம் இருந்து செல்போனை பேசுவதற்காக வாங்கி கொண்டு தப்பியோடினர். இதனால் அதிர்ச்சி அடைந்த வீரமணி அவர்களை விரட்டி சென்றார். சிறிது தூரத்தில் அந்த நபர்கள் தங்களது கூட்டாளிகள் 2 பேருடன் சேர்ந்து வீரமணியை தாக்கினர். மேலும் கூகுல் பே மூலமாக ரூ.15 ஆயிரத்தை அனுப்ப வைத்தனர்.

பின்னர் அந்த நபர்கள் வீரமணியின் காரை திருடி சென்று விட்டனர். இதில் காயமடைந்த வீரமணி தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்து வீரமணி கொடுத்த புகாரின் பேரில் மத்திகிரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அப்போது அந்த நபர்கள் குருபட்டியை சேர்ந்த இம்ரான் (23), முஸ்ரப் (22), ஆனந்த் (22) உள்ளிட்டோர் என தெரிய வந்தது. இதையடுத்து அவர்கள் 4 பேரையும் போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.


Next Story