நிலப்பிரச்சினை தகராறில் 3 பேர் மீது வழக்கு


நிலப்பிரச்சினை தகராறில் 3 பேர் மீது வழக்கு
x

நிலப்பிரச்சினை தகராறில் 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தப்படுகிறது.

அரியலூர்

அரியலூர் மாவட்டம், உடையார்பாளையம் அருகே வானத்திரியான்பட்டிணம் கிராமத்தை சேர்ந்தவர் மருதகாசி(வயது 79). விவசாயி. இவருக்கு மனோகரன்(45), ராமலிங்கம்(42), அண்ணாமலை(40) என 3 மகன்கள் உள்ளனர். 3 பேருக்கும் பாகம் பிரித்து கொடுத்தபோதிலும் மனோகரனுக்கும், அண்ணாமலைக்கும் இப்பிரச்சினை சம்பந்தமாக முன் விரோதம் இருந்து வருகிறது. இந்நிலையில் நேற்று மனோகரன் மனைவி பூபதிக்கும், அண்ணாமலைக்கும் தகராறு ஏற்பட்டது. இதில் அண்ணாமலை மற்றும் தந்தை மருதகாசி ஆகியோர் எதிர் தரப்பில் பூபதி ஆகியோரும் ஒருவரையொருவர் அடித்து தாக்கிக்கொண்டனர். இதில் படுகாயமடைந்த பூபதி மற்றும் மருதகாசி ஆகிய 2 பேரும் ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். இது குறித்து இரு தரப்பினரும் உடையார்பாளையம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் உடையார்பாளையம் போலீசார் மருதகாசி, அவரது மகன் அண்ணாமலை மற்றும் பூபதி ஆகிய 3 பேர் மீதும் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


Next Story