தம்பதியை தாக்கிய 4 பேர் மீது வழக்கு


தம்பதியை தாக்கிய 4 பேர் மீது வழக்கு
x

தம்பதியை தாக்கிய 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

கரூர்

குளித்தலை அருகே உள்ள ரெத்தினம்பிள்ளை புதூர் பகுதியை சேர்ந்தவர் சரவணன். இவரது மனைவி சரோஜா (வயது 28). இவர் சம்பவத்தன்று வீட்டில் இருந்தபோது, அங்கு வந்த அதே பகுதியை சேர்ந்த வீரப்பன் (62), அவரது மனைவி லட்சுமி (55), மகன்கள் மனோகரன் (34), ராஜேந்திரன் (32) ஆகிய 4 பேரும் சேர்ந்து சரோஜா மற்றும் அவரது கணவர் சரவணன் ஆகியோரை திட்டி தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இதுகுறித்து சரோஜா கொடுத்த புகாரின்பேரில், வீரப்பன் உள்பட 4 பேர் மீது குளித்தலை போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story