கார்த்தி சிதம்பரம் இல்லத்தில் சிபிஐ மீண்டும் சோதனை


கார்த்தி சிதம்பரம் இல்லத்தில் சிபிஐ மீண்டும் சோதனை
x
தினத்தந்தி 9 July 2022 10:36 AM GMT (Updated: 9 July 2022 10:42 AM GMT)

சென்னையில் உள்ள கார்த்தி சிதம்பரம் இல்லத்தில் சிபிஐ அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்

சென்னை,

காங்கிரஸ் எம்.பி. கார்த்தி சிதம்பரம் இல்லத்தில் சிபிஐ அதிகாரிகள் மீண்டும் சோதனை நடத்தி வருகின்றனர்.

ஏற்கனவே கடந்த மே மாதம் கார்த்தி சிதம்பரத்தின் வீடு, அலுவலகம் உள்ளிட்ட இடங்களிலும் சிபிஐ அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். சீனர்களுக்கு முறைகேடாக விசா வழங்கிய வழக்கில் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

தற்போது மீண்டும் சென்னையில் உள்ள கார்த்தி சிதம்பரம் இல்லத்தில் டெல்லியில் இருந்து வந்த 6சிபிஐ அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.கடந்த முறை சோதனையின் போது ஒரு அறை பூட்டி இருந்ததால் தற்போது சோதனை நடத்துகின்றனர் .


Next Story