தமிழகத்தில் 15 மாவட்டங்களில் இரவு 7 மணி வரை மழைக்கு வாய்ப்பு


தமிழகத்தில் 15 மாவட்டங்களில் இரவு 7 மணி வரை மழைக்கு வாய்ப்பு
x

கோப்புப்படம் 

மதுரை மற்றும் சிவகங்கை ஆகிய மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது

சென்னை,

தமிழகத்தில் உள்ள 15 மாவட்டங்களில் இரவு 7 மணி வரை மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. அதன்படி, மதுரை மற்றும் சிவகங்கை ஆகிய மாவட்டங்களில் மணிக்கு 30-40 கி.மீ. வேகத்தில் பலத்த காற்றுடன், இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

பெரம்பலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், திருச்சிராப்பள்ளி, புதுக்கோட்டை, ராமநாதபுரம், தேனி, திண்டுக்கல், விருதுநகர், கன்னியாகுமரி, திருநெல்வேலி மற்றும் தென்காசி ஆகிய 13 மாவட்டங்களில் மணிக்கு 30-40 கி.மீ. வேகத்தில் பலத்த காற்றுடன், இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story