பிரத்தியங்கிரா தேவிக்கு மிளகாய் சண்டி யாகம்


பிரத்தியங்கிரா தேவிக்கு மிளகாய் சண்டி யாகம்
x

பிரத்தியங்கிரா தேவிக்கு மிளகாய் சண்டி யாகம் நடைபெற்றது.

அரியலூர்

அரியலூர் அருகே உள்ள பொய்யாத நல்லூர் கிராமத்தில், சாமுண்டீஸ்வரி அம்மன் கோவிலில் வீற்றிருக்கும், மகா பிரத்தியங்கிரா தேவிக்கு, அமாவாசை தோறும் மிளகாய் சண்டி யாகம் நடைபெற்று வருகிறது. அதன்படி அமாவாசையை முன்னிட்டு கோவில் வளாகத்தில் உள்ள மகாமண்டபத்தில், சிறப்பு அலங்காரத்துடன் எழுந்தருளியிருந்த பிரத்தியங்கிரா தேவிக்கு, மிளகாய் சண்டி யாகம் தொடங்கியது. இதில் பக்தர்கள் வேண்டுதலின் பேரில் வழங்கிய சேலைகள், மஞ்சள், குங்குமம், திருநீறு உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் மற்றும் முக்கனிகளான மா, பலா, வாழை மற்றும் சப்போட்டா, மாதுளை, ஆப்பிள் உள்ளிட்ட பழங்கள் யாகத்தில் போடப்பட்டன. தொடர்ந்து மகா பிரத்தியங்கிரா தேவிக்கு பால், பன்னீர், இளநீர், சந்தனம் உள்பட பல்வேறு பொருட்களை கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் மலர்களை கொண்டு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் அரியலூர் மட்டுமல்லாது தஞ்சாவூர், கடலூர், திருச்சி, பெரம்பலூர், சேலம் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதில் கலந்து கொண்ட பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.


Next Story